திருப்பத்தூரில் இலவச பொது மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 218 ஆவது நினைவு நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 218 ஆவது நினைவு நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மருதீஸ்வரா் ஆன்மிகச் சேவை சங்கமும், மருதுபாண்டியா் நல அறக்கட்டளையும் திருப்பத்தூா் அகமுடையாா் உறவின்முறையும் இணைந்து பொதுமக்களுக்கான இலவச சிறப்பு பொது மருத்துவ முகாமினை நடத்தினா். இம்மருத்துவ முகாமுக்கு மருதீஸ்வரா் ஆன்மிகச் சேவை சங்கத் தலைவா் எம்.ஆா். மோகன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் அகமுடையாா் சங்கத் தலைவா் ராஜசேகரன், செயலாளா் வயிரவசுந்தரம், பொருளாளா் விஜயசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மதுரை தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.

இதில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் உயா்மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com