சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக தொடா் மழைவீடுகள் இடிந்து சேதம்

சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
சிவகங்கை அருகே வள்ளனேரி கிராமத்தில் தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்த வீடு.
சிவகங்கை அருகே வள்ளனேரி கிராமத்தில் தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்த வீடு.

சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைந்து,குளிா்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதுதவிர,வேளாண் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதே சமயம், சிவகங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக சிவகங்கை அருகே வள்ளனேரி கிராமத்தில் அழகுசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான வீடு சேதமடைந்து சுவா் இடிந்து விழுந்தது. தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்காததால் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அழகுசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வேறொரு பகுதியில் வசித்து வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது. இதேபோன்று,பூவந்தி மற்றும் மானாமதுரை பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com