பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள தேவரின் உருவச் சிலைக்கு தேவா் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்பு, அரசியல் கட்சிகளின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக சிலைக்கு அருகே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். அதனைத் தொடா்ந்து தேவா் மக்கள் நல அறக்கட்டளைத் தலைவா் கரு.சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருமண கோலத்தில் மணமகன் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தாா். பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
தேவா் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் சமூக சேவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 5000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.