திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியவருக்கு சிவகங்கை மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே சருகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணியன் மகன் மச்சக்காளை (40). அரசு பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகள் ராஜலெட்சுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றினாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் மானாமதுரை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மச்சக்காளைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து மச்சக்காளை மதுரையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.