சாலையோர மைல் கல்லில் பைக் மோதி இளைஞர் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சாலையோôர மைல்கல்லில் இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் வெள்ளிக்கழமை இரவு  உயிரிழந்தார். 


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சாலையோôர மைல்கல்லில் இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் வெள்ளிக்கழமை இரவு  உயிரிழந்தார். 
சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்திருந்தார். இவரைப் பார்ப்பதற்காக  திருப்புவனம் அருகிலுள்ள கே.பெத்தானேந்தல் காலனியைச்  சேர்ந்த உடையப்பன் மகன் பழனிக்குமார் (20), இவரது உறவினரான மீனாட்சி சுந்தரம் மகன் முனீஸ்பாண்டி( 19) ஆகிய இருவரும்  இரு சக்கர வாகனத்தில் பாசங்கரை கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். திருப்பாச்சேத்தி அருகே கானூரை அடுத்து கல்லூரி விலக்குப் பகுதியில்  சென்றபோது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்திலிருந்த மைல் கல் மீது  மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  முனீஸ் பாண்டி சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.  திருப்பாச்சேத்தி போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com