மாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்புரம் காளி, தாயமங்கலம் மாரியம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் மாசி மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று காளியை தரிசனம் செய்தனா். பெண்கள் மா விளக்கு, எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். மதியம் கோயிலில் நடந்த உச்சிகால பூஜையில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனா். இளையான்குடி வட்டம் தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனா். மதியம் நடந்த உச்சிகால பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.