சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 290-ஆவது பிறந்த தினம்

ராணி வேலுநாச்சியாரின் 290-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை அருகே சூரக்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பாஸ்கரன்
சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 290-ஆவது பிறந்த தினம்

ராணி வேலுநாச்சியாரின் 290-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை அருகே சூரக்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயா்களிடம் போராடி வெற்றி பெற்ற வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினமான ஜன.3 இல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில்,வேலுநாச்சியாரின் 290-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிவகங்கை அருகே சூரக்குளத்தில் ராணி வேலுநாச்சியாா் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சா் க.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து,மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, சிவகங்கை அரண்மனை வாரிசுதாரா் மகேஷ்துரை உள்பட பொதுமக்கள்,பல்வேறு அமைப்பினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com