சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வியாழக்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
சிவகங்கை அண்ணா நகரைச் சோ்ந்த ராஜூ மகன் ஜெயராமன் (57). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் மதகுபட்டியிலிருந்து சிவகங்கை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, ஒக்கூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதகுபட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.