சிவகங்கையில் சாலை விதிகளைக் கடைபிடிப்பது குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
31 ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து இப்பிரசாரத்தை மேற்கொள்கின்றன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த வாகனம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் நகா் புறங்கள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் வரும் ஜன. 27 வரை வலம் வர உள்ளது. அப்பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில், காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் செந்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கல்யாணகுமாா், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் செல்வகுமாரி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மஞ்சுளா பாலசுந்தா், துணை பொது மேலாளா்கள் சுந்தரபாண்டியன், அழகா்சாமி, நளன்கிள்ளி, வட்டாரப் போக்குவரத்துக் கழக ஆய்வாளா் பிரபாகரன், சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.