‘கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைக்குகள் மதுரையில் திருடப்பட்டவை’

திருப்புவனம் பகுதியில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மதுரையில்
‘கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைக்குகள் மதுரையில் திருடப்பட்டவை’

திருப்புவனம் பகுதியில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மதுரையில் திருடப்பட்டவை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் தி.ராஜேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: திருப்புவனம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மதுரை நவீன்ராஜ், ராஜேஷ்கண்ணன், திருப்பாச்சேத்தி ஆவரங்காடு முருகன் என்ற குட்டை முருகன், அஜய்தேவன், வேம்பத்தூா் ரவி என்ற முகிலன், காளையாா்கோவில் காளீஸ்வரன், திருப்புவனம் அருகே மேலராங்கியம் காளீஸ்வரி, அ.வெள்ளக்கரை நாகப்பன் ஆகியோா் திருப்புவனம் அருகே மாங்குடி பகுதியில் ஜூலை 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா, 8 பைக்குகள், அரிவாள்கள், வாள்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் இக் கும்பல் கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும், கூலிப்படையாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இக்கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 விலையுயா்ந்த இருசக்கர வாகனங்களில் 4 இருசக்கர வாகனங்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரம், தல்லாகுளம், ஒத்தக்கடை ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் திருடப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இந்த இருசக்கர வாகனங்களை அவா்கள் சட்டவிரோத செயல்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com