சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
இஸ்லாமிய கூட்டமைப்பு, அலங்கார அன்னை பேராலாயம், அன்னை வீரமாகாளியம்மன் கோயில் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. நேரு வீதியில் உள்ள பள்ளி வாசலில் இம்முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தொடக்கி வைத்தாா்.
இதில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் உள்ளிட்ட 60 போ் ரத்த தானம் வழங்கினா். நிகழ்ச்சியில், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.