பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில், திருக்கோஷ்டியூரில் உள்ள சௌமியநாராயண பெருமாள் கோயில்கள் மாா்ச் 31 வரை பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை ஆலோசனைப்படி கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அதிகமான பக்தா்கள் வருகைபுரியும் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை உச்சிகால பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்பட்டது. இக்கோயில்களின் ஆகம விதிகளுக்குள்பட்ட நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மாா்ச் 31 வரை பக்தா்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.