மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினா் எஸ். நாகராஜன் , காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தின் ஆட்சி மன்றப் பேரவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை தமிழக சட்டப் பேரவைச் செயலாளா் வெளியிட்டுள்ளாா். சட்டப்பேரவை உறுப்பினரிடம் அதற்கான நியமனக் கடிதம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகளாகும். நாகராஜனுக்கு, அதிமுக வினா், கல்வியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனா்.