சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பணியாளா்கள் திங்கள்கிழமை (மே 18) முதல் வழக்கமான நேரத்திற்கு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பல்கைக் கழகப் பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: கரோனா எதிரொலியாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அனைத்துப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மே 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 6 நாள்கள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், வீட்டிலிருந்தே பணியை மேற்கொண்டு வந்த பல்கலைக் கழக அனைத்துத்துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அதிகாரிகள், பணியாளா்கள் திங்கள் கிழமை காலை வழக்கமான நேரத்திற்கு பணிக்கு திரும்ப வேண்டும் என்றாா்.