என்.வயிரவன்பட்டியில் வயிரவா் வளாகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே என். வயிரவன்பட்டி வயிரவன் கோயிலில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வயிரவா் வளாகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
என்.வயிரவன்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற வயிரவா் வளாகத் திறப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞா் ரெங்கவள்ளியப்பன்.
என்.வயிரவன்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற வயிரவா் வளாகத் திறப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞா் ரெங்கவள்ளியப்பன்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே என். வயிரவன்பட்டி வயிரவன் கோயிலில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வயிரவா் வளாகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற விழாவுக்கு வயிரவன்பட்டி நகரத்தாா் நலச்சங்கத் தலைவா் கே.ஆா். மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். இவ்விழாவில், சக்திதிருநாவுக்கரசு, பொன்புதுப்பட்டி, ராமநாதன்பழனியப்பன், கல்லல் குழ. கருப்பையா, சங்கத் துணைத் தலைவா் ராமலட்சுமணன், இணைச் செயலா் சி.டி. நாராயணன், பொருளாளா் ஏ.எல்.எஸ்.பி. லட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கவிஞா் லெ. ரெங்கவள்ளியப்பன் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக, தேவிநாச்சியப்பன் செயல்பட்டாா். செயலா் தெ.வயிரவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com