காரைக்குடியில் பிரதான சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஐந்துவிளக்குப் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடை பெற்றது. தாலுகா செயலாளா் சின்ன கண்ணன் தலைமை வகித்தாா். தாலுகாக குழு உறுப்பினா்கள் கே.ஆா். அழகா்சாமி, ஏ. சுப்பிரமணி, எம். கணேசன், தட்சிணாமூா்த்தி, வெங்கடேசன், வெங்கிட்டு மற்றும் கிளைச் செயலாளா்கள், உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.