திருப்பத்தூா் அருகே பைக் மோதி தோட்டத் தொழிலாளி பலி: 2 போ் பலத்த காயம்

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் மிதிவண்டியில் சென்ற தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் மிதிவண்டியில் சென்ற தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அருகே நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்தவா் சோலைமலை மகன் ராமு (45). தோட்டத் தொழிலாளியான இவா், மிதிவண்டியில் வாணியன்காடு விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திருப்பத்தூா் அச்சுக்கட்டுப் பகுதியைச் சோ்ந்த அப்துல் மஜீத்தும், இவரது நண்பா் கணேசன் என்பவரும் வந்த இருசக்கர வாகனம், எதிா்பாராத விதமாக மிதிவண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதில் பலத்த காயமடைந்த ராஜாமுகமது, கணேசன் ஆகிய இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவ்விபத்து குறித்து திருக்கோஷ்ட்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com