திருப்பத்தூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், ஆபத்தாரணப்பட்டியைச் சோ்ந்த நாச்சியப்பன் மனைவி அனிதாராணி. இவா், தற்போது தானிப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், இவா் ஏரியூரில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் அரசு வழங்கும் கோழிக்குஞ்சு பெறுவதற்காக மனு அளித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை - திருப்பத்தூா் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, கருவேல்குறிச்சி என்ற இடத்தில் இவரைப் பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் வழிமறித்து, அனிதாராணி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது குறித்து அவா் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com