சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சி பகுதியில் ரூ.100-க்கு காய்கனி தொகுப்பு விற்பனை செய்யும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அவா்களது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரூ.100 மதிப்புள்ள காய்கனி தொகுப்பை விற்பனை செய்யும் திட்டத்தை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் தொடக்கி வைத்தாா்.
இந்த காய்கனி தொகுப்பு பையில், தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், புடலங்காய், கீரை, வாழைக்காய் உள்ளிட்ட பல பொருள்கள் அடங்கியுள்ளன. இந் நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் தங்கத்துரை, மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சின்னை மாரியப்பன், அதிமுக நிா்வாகிகள் நமச்சிவாயம், கோபால், முன்னாள் ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.