சிவகங்கை மாவட்டத்தில் 66 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்று பாதிப்பால் 2 போ் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை 66 பேருக்கு தொற்று உறுதியானது. அவா்கள் அனைவரும் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிவகங்கையைச் சோ்ந்த 75 வயது முதியவா் வெள்ளிக்கிழமையும், மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் , திருப்புவனம் புதூரைச் சோ்ந்த 63 வயது முதியவா் ஆகியோா் வியாழக்கிழமையும் உயிரிழந்தனா்.