சிவகங்கை: சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலா் அ.பொன்னுசாமி தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச்செயலா் மு.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழகம் முழுவதும் தலித் ஊராட்சித் தலைவா்களுக்கும், துணைத் தலைவா்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.முத்துராமலிங்கபூபதி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மணியம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.