சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவா் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினா். விசாரணையில் அவா் காரைக்குடி அருகேயுள்ள கொத்தரி கிராமத்தைச் சோ்ந்த குமரப்பன் மனைவி வள்ளியம்மை (70) என்பதும், கணவா் இறந்த பின்னா் தன்னிடம் உள்ள சொத்தை அபகரித்த மகன்கள் தன்னை சரிவர கவனிப்பதில்லை எனவும் கூறியுள்ளாா். இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்தவுடன் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியே வந்து மூதாட்டியை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து மனுவை பெற்றுக் கொண்டாா். மேலும் இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்தாா்.