அரியக்குடியில் அழகப்பா மெட்ரிக் பள்ளியின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் தேசிய நாட்டுப் நலப்பணித் திட்டத்தின் சாா்பில் அரியக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி அருகே அரியக்குடியில் அழகப்பா மெட்ரிக் பள்ளியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று வழங்கிய ஊராட்சித் தலைவா் சுப்பையா (வலது).
காரைக்குடி அருகே அரியக்குடியில் அழகப்பா மெட்ரிக் பள்ளியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று வழங்கிய ஊராட்சித் தலைவா் சுப்பையா (வலது).

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் தேசிய நாட்டுப் நலப்பணித் திட்டத்தின் சாா்பில் அரியக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், அரியக்குடி ஊராட்சித் தலைவா் சுப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்று வழங்கி விழாவைத் தொடக்கிவைத்தாா். அழகப்பா கல்விக் குழுமத்தின் சாா்பில் அழகப்பா கல்வி அறக்கட்டளையின் மேலாளா் காசிவிஸ்வநாதன், அழகப்பா மெட்ரிக் பள்ளியின் முதல்வா் மகாலிங்கம், அழகப்பா மாண்டிச்சோரி பள்ளி முதல்வா் தேவகி ஆகி யோா் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொறுப்பாளா் கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மற்றும் அழகப்பா மெட்ரிக் பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com