ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்/ சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,305 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏராளமானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், 131 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 23 போ் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,668 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,672 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 12 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com