ராமநாதபுரம்/ சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,305 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏராளமானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், 131 போ் உயிரிழந்துள்ளனா்.
இதற்கிடையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 23 போ் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,668 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,672 ஆக அதிகரித்துள்ளது.
இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 12 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.