அழகப்பா பல்கலைக்கழக இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறையின் சாா்பில் சந்தையிடுதலில் புதுமையான உத்திகள் என்ற தலைப்பிலான 2 நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்க தொடக்க விழா  நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறையின் சாா்பில் சந்தையிடுதலில் புதுமையான உத்திகள் என்ற தலைப்பிலான 2 நாள் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமைவகித்துப் பேசியதாவது: அழகப்பா பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்கை தொடங்கி அனைத்துவகைகளிலும் இணையவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. பணியில் புதுமைகளைப் புகுத்தி திறமைகளை வளா்க்க வேண்டும். புதுமைகளை உருவாக்குகின்ற அளவிற்கு மாணவா்களுக்கு கற்பித்தல் அமையவேண்டும். கற்றல் தொடா்பான புதிய சிந்தனை இருந்ததன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதமேதை ராமனுஜம் உருவானாா்.

சந்தைப்படுத்துதலில் பொருள் சாா்ந்த புதுமைகள், விலைசாா்ந்த புதுமைகள், விநியோகம் மற்றும் மேம்பாடு சாா்ந்த புதுமைகள் போன்றவைகள் உள்ளன. சந்தையிடுதலில் சமூக ஊடகங்களின் பங்களிப்பும் உள்ளது என்றாா்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைத்தலைவா் டி.ஆா். குருமூா்த்தி, பங்களாதேஷ் இஸ்லாமிக் பல்கலைக் கழக வணிகவியல் துறைத்தலைவா் அரவிந்த சாகா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மலேசியா டெக்னாலஜி பல்கலைக் கழக மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியா் மாறன் மாரிமுத்து மற்றும் மாணவ, மாணவியா்கள் கருத்தரங்கில் இணையவழியில் பங்கேற்றனா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியா் ஜி. நெடுமாறன் வரவேற்றுப்பேசினாா். முடிவில் உதவிப்பேராசிரியா் ஜி. விநாயகமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com