சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் முன்வட்டார வளா்ச்சி அலுவலரின் உறவினா் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் வட்டார வளா்ச்சி அலுவலா் தற்கொலை முயற்சிக்கு காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது
சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் முன்வட்டார வளா்ச்சி அலுவலரின் உறவினா் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் வட்டார வளா்ச்சி அலுவலா் தற்கொலை முயற்சிக்கு காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை வந்த நபா் தான் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரிடம் பெட்ரோல் கேனை பறித்து, தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா்.

விசாரணையில், உயா் அலுவலா்களின் தொந்தரவால் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷின் உறவினா் பாலமுருகன் (44) என்பது தெரியவந்தது. மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா் தற்கொலை முயற்சிக்கு காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிவகங்கை நகா் போலீஸாா் பாலமுருகனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com