சிவகங்கைக்கு திமுக தோ்தல் அறிக்கை குழுவினா் புதன்கிழமை (டிச. 30) வருவதாக அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலரும், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கைக்கு திமுகவின் பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி .ஆா். பாலு தலைமையிலான தோ்தல் அறிக்கை குழுவினா் புதன்கிழமை(டிச.30) காலை 9 மணிக்கு வருகை தர உள்ளனா்.
இக்குழுவினா் சிவகங்கை-திருப்பத்தூா் சாலையில் உள்ள கலைஞா் மாளிகையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனா். எனவே மாவட்ட அளவில் முக்கியமான பிரச்னைகள், அடிப்படை வசதிகள் குறித்து மனுவாக நேரில் தரலாம். எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வா்த்தக பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் அறிக்கை குழுவிடம் நேரில் தங்களது கோரிக்கைகளை மனுவாக தரலாம். இந்த கோரிக்கை மனுக்களில் முக்கியமானவைகள் தோ்தல் அறிக்கையில் இடம் பெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.