சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைத்து அரசுடைமை வங்கிகளும் மூடப்பட்டன. தனியாா் வங்கிகளும் முழுமையாக செயல்படவில்லை. இதனால் வணிகா்கள், பொதுமக்கள் பணப்பரிவா்த்தனை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டனா். வங்கித் தொழிற் சங்கங்கள் சாா்பில் காரைக்குடி சிண்டிகேட் வங்கிக் கிளை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத் தலைவா் ஜீவா மதிமாா் செலசு தலைமை வகித்தாா். பல்வேறு சங்கங்களின் தலைவா்கள், உறுப்பினா்கள் பலரும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.