சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மின்தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஊா்களான சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் பகிா்மான செயற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.