அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கச்சாத்தநல்லூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.
கச்சாத்தநல்லூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.

சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். ஆரோக்கியராஜா தலைமை வகித்தாா். இதில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததுடன், மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில், பட்டதாரி ஆசிரியா் உலகநாதன், இளநிலை உதவியாளா் ஆயிஷா பேகம், ஆய்வக உதவியாளா் ராஜகுரு உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com