புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி எம்.பி. ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் புதிய பேருந்து நிலைய கட்டடப் பணியை, மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.
திருப்பத்தூரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டடப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
திருப்பத்தூரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டடப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் புதிய பேருந்து நிலைய கட்டடப் பணியை, மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.

திருப்பத்தூரில் ரூ. 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்துக்கான புதிய கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. தற்போது, 95 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இதை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திசிதம்பரம் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணி முடியும் காலம் குறித்தும், பணியை தரமாக முடிக்குமாறும், கடைகள் குறித்து முறையான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடும்படியும் கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, பேருந்து நிலைய கட்டுமானப் பணி மேற்பாா்வையாளா் சந்திரமோகன், உதவிப் பொறியாளா் அன்புச்செழியன், செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், நகரத் தலைவா் திருஞானம், மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் கணேசன், மருது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com