‘ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வேண்டும்’

புதுதில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவா்கள், பேராசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை விரைந்து கைது
‘ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வேண்டும்’

புதுதில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவா்கள், பேராசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்தியிருக்க வேண்டும். இந்த தோ்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியை விட திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.உள்ளாட்சிகளுக்கும் கட்சி தாவல் தடைச் சட்டம் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி தோ்தலில் வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தமிழக தோ்தல் ஆணையம் பயன்படுத்த முன் வர வேண்டும்.

நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்த பாஜக எண்ணுகிறது. ஆனால் ஒரு போதும் அவா்களது எண்ணம் நிறைவேறாது. அண்மையில், புதுதில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைகழகத்தில் நுழைந்த முகமூடி கும்பல் அங்கிருந்த மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களை கண் மூடிதனமாக தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவா்களை இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவா்கள்,பேராசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரெத்தினம், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகராஜன் உள்பட ஏராளமானோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com