சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாண்டியன் சரசுவதி யாதவ் கல்வி குழுமத்தின் நிறுவனா் மலேசியா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கல்லூரியின் நிா்வாக இயக்குநா் வரதராஜன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். விழாவில் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, கல்லூரியின் முதல்வா் பழனிசாமி வரவேற்றாா். கல்லூரியின் உதவி பேராசிரியா் பத்மஸ்ரீ நன்றி கூறினாா்.