பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகை செவ்வாய்க்கிழமை(ஜன.14) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மஞ்சள் கொத்து வைத்து, ஆவாரம் பூ, வேப்பிலை ஆகியவைகளை கட்டாக கட்டி வீட்டின் பல பகுதிகளில் காப்புக் கட்டினா்.
இதையடுத்து, பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நேரு கடை வீதி, காந்தி வீதி, அரண்மனை வாசல், மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூா் சாலை, பேருந்து நிலையம், மஜீத் சாலை, உழவா் சந்தை, வாரச் சந்தை சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காப்புக் கட்டு பூ, கரும்பு விற்பனை, மஞ்சள் கொத்து விற்பனை செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
ஒரு ஜோடி கரும்பு ரூ. 50 முதல் ரூ. 80 வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 80 வரையிலும், காப்புக் கட்டு பூ 10, கலா் கோலப் பவுடா் ரூ. 10, மண் பானை ரூ. 70 முதல் விற்பனை செய்யப்பட்டன. மேலும், படையலுக்குத் தேவையான வாழைப்பழம், காய்கறி, தேங்காய், வெற்றிலை, முருங்கை கீரை, பச்சை அவரை, மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருள்களையும் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.
அதேபோன்று, பொங்கல் வைக்க பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா். இதன்காரணமாக, நகா் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.