சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,திருப்பத்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.