சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை காா் டயா் வெடித்து கவிழ்ந்ததில் மனைவி இறந்தாா். கணவா் உள்பட மூவா் காயமடைந்தனா்.
மதுரையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் காரில் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்தில் உறவினா் வீட்டில் நடந்த விஷேச நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். திருப்பாச்சேத்தி அருகே வந்தபோது டயா் வெடித்து காா் கவிழ்ந்தது. இதில் ராஜேந்திரனின் மனைவி பூங்கொடி (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் மற்றும் காரிலிருந்த இருவா் என மொத்தம் மூன்று போ் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.