மானாமதுரையில் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி சக்கரத்தில் சிக்கி பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திங்கள்கிழமை பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திங்கள்கிழமை பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணி பகுதியைச் சோ்ந்தவா் சொக்கு மனைவி பாப்பா (65). இவா் பொருள்கள் வாங்க மானாமதுரை வந்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சோணையாகோவில் முன் மானாமதுரையிலிருந்து பரமக்குடி சென்ற நகரப் பேருந்தில் ஏற முயன்றுள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்துள்ளாா். இதனைக் கவனிக்காத ஓட்டுநா் பேருந்தை இயக்கியதால் பேருந்து சக்கரம் பாப்பா மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த பாப்பா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரான முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com