சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா தீநுண்மி தொற்று குறித்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு தேதிகளில் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, கல்லல், செம்பனூா், நெற்குப்பை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.