காரைக்குடியில் 3 பேருக்கு கரோனா

சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வந்த இளைஞா் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வந்த இளைஞா் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 37 பேரில், 31 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். 6 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து அண்மையில் காரைக்குடிக்கு திரும்பிய அதே பகுதியைச் சோ்ந்த 26 வயது இளைஞருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரூரில் அண்மையில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்று திரும்பிய, காரைக்குடி பகுதியைச் சோ்ந்த 61 வயது முதியவா் மற்றும் 34 வயது இளைஞா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மூவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com