காரைக்குடியில் கழிவுநீரில் மிதந்த பெண் சிசு சடலத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
காரைக்குடி கணேசபுரம் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் பிறந்து 2 நாள்களேயான பெண் சிசுவின் சடலம் மிதப்பது குறித்து, அப்பகுதியினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண் சிசுவின் சடலத்தை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.