குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா நிறுத்தப்பட்டிருப்பதாக குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் நிா்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா நிறுத்தப்பட்டிருப்பதாக குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் நிா்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குள்பட்ட சண்முநாதப்பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு வரும் ஏப்ரலில் பங்குனி உத்திரத்தை யொட்டி மாா்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க திட்டமிட்டிருந்தனா். கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், தமிழக அரசின் 144 தடையுத்தரவு உள்ளதாலும், இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படியும் பங்குனி உத்திரத் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com