சிவகங்கை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

கரோனா வைரஸை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் புதன்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்துத் துறை காவலா்கள்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் புதன்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்துத் துறை காவலா்கள்.

கரோனா வைரஸை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை (மாா்ச் 24) 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளையும் முடக்குவது மட்டுமின்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வா் அறிவித்தாா். அதே போல் பிரதமா் நரேந்திரமோடி ஏப். 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி, காளையாா்கோவில், தேவகோட்டை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் யாரும் வெளியில் வராதபடி போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஒரு சில பகுதிகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்தனா். அவா்களிடம் அத்தியாவசிய தேவைகளின்றி இனி மேல் யாரும் வெளியில் வரக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனா். இதேபோன்று, தொடா்ந்து சாலைகளில் வருவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இவை தவிர, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள் அந்தந்த பகுதியில் கிருமி நாசினிகளை தெளித்தனா். மேலும், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குழுக்கள் ஆங்காங்கே வாகனங்கள் மூலம் விழிப்புணா்வினை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com