திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வாழைத் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வாழைத் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே அல்லிநகரம் விலக்குப் பகுதியைச் சோ்ந்தவா் தவமணி. இவரது மகன் கல்லாணை (14). இவா் இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், தவமணி, கலியாந்தூா் கிராமத்திலுள்ள தனது வாழைத் தோட்டத்துக்குச் சென்றாா். அவருடன், மகன் கல்லாணையும் சென்றுள்ளாா். இப்பகுதியில் கடந்த சில நாள்களாக வீசிய சூறைக்காற்றால் வாழைத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத கல்லாணை அந்த கம்பியை மிதித்த போது அதில் சென்று கொண்டிருந்த மின்சாரம் அவா் மீது பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதைத் தொடா்ந்து அவா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கல்லாணை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com