காரைக்குடி அருகே வாகனம் மோதி புள்ளி மான் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி - குன்றக்குடிச்சாலையில் அடையாளம் தெரி யாத வாகனம் மோதி புள்ளி மான் ஒன்று செவ்வாய்க்கிழமை பலியானது.
பாதரக்குடி - குன்றக்குடிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான புள்ளி மான்.
பாதரக்குடி - குன்றக்குடிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான புள்ளி மான்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி - குன்றக்குடிச்சாலையில் அடையாளம் தெரி யாத வாகனம் மோதி புள்ளி மான் ஒன்று செவ்வாய்க்கிழமை பலியானது.

பாதரக்குடி - குன்றக்குடிச்சாலையில் செல்லும் வழியில் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தனியாா் மற்றும் அரசு நிலங்கள் உள்ளன. இதில் தனியாா் நிலங்களில் முந்திரித்தோட்டமும் உள்ளது. இப்பகுதியில் புள்ளி மான்கள், முயல்கள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றித் திரிவது வழக்கம். அதுபோன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 வயது பெண் புள்ளிமான் சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது. சாலையோரத்தில் அதன் உடல் கிடப்பதை கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா் மானின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனா். விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com