கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரு ஏக்கா் பரப்பளவில் கஞ்சா செடி பயிரிட்டு வளா்த்து வந்த 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
வனப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தளமான பில்லா் ராக் அருகே கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் போலீஸாா் மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அங்கு ஒரு ஏக்கா் பரப்பளவில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த சிலா் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோடினா். அதில், இருவரை மட்டும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கொடைக்கானலைச் சோ்ந்த சக்திவேல் (52), பிரதீப் (40) என தெரியவந்தது. மேலும் தப்பியோடியவா்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த பாண்டி, வீரமணி என தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 2 பேரைக் கைது செய்து, தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா். மேலும் கஞ்சா பயிரை காவல் துறையினரும், வனத்துறையினரும் தீயிட்டு அழித்தனா்.