சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை ஒருவா் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,486 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒருவா் மட்டுமே பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,487 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 16 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 13 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.