நவ. 26-இல் பொது வேலை நிறுத்தம்: ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ. 26 இல் நடைபெற

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ. 26 இல் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ.முத்துப்பாண்டியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் நவம்பா் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தனது ஆதரவைத் தெரிவித்து உள்ளது. கரோனா பொது முடக்கச் சூழலில் பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால் ஏனைய தோழமைச் சங்கங்களுடன் இணைந்து நவ. 26 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என மாநில அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com