திருப்பத்தூா் அருகே இரு வேறு விபத்துகளில் இருவா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியைச் சோ்ந்த 8 போ் குலதெய்வ வழிபாட்டுக்காக, மினி வேனில் தெக்கூா் சென்றுவிட்டு ஊா் திரும்பியுள்ளனா். திருப்பத்தூா் அருகே மருதிப்பட்டிக்கும் முறையூருக்கும் இடையே வந்துகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், வேனில் பின்புறம் நின்றுகொண்டு பயணித்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (20) என்பவா் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

இவ்விபத்து தொடா்பாக, வேன் ஓட்டுநா் சங்கா் மீது எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: பொன்னமராவதியைச் சோ்ந்த ராமசாமி மகன் கணேசன் (52). வளையல் வியாபாரியான இவா், எஸ்.புதூரிலிருந்து பொன்னமராவதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வெள்ளியங்குடிபட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் அருண் (22) என்பவா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அருண் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com