சிவகங்கை: திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சிவகங்கையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 61 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு திமுகவின் சிவகங்கை நகரச் செயலா் சி.எம்.துரைஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்டத் துணை செயலா் கே.எஸ்.எம்.மணிமுத்து முன்னிலை வகித்தாா்.
இதில், வடக்கு ஒன்றியச் செயலா் ஆ.முத்துராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலா் எம்.ஜெயராமன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சேதுபதிராஜா உள்பட 61 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.