சிவகங்கையில் மனைவியை கொலை செய்த கணவரை, சிவகங்கை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சிவகங்கை மஜீத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பஞ்சு (50). இவரது மனைவி ராதா (46). இவரும், இவரது மகள் ஜீவா (13) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்துள்ளனா். அப்போது, பஞ்சு தனது உறவினரான சதீஷ் என்பவருடன் வீட்டுக்கு வந்துள்ளாா்.
அதையடுத்து, பஞ்சுவுக்கும், ராதாவுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பஞ்சு, அங்கிருந்த வாளால் மனைவியை வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராதாவின் சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து பஞ்சுவை கைது செய்த போலீஸாா், அவரது உறவினரான சதீஷை தேடி வருகின்றனா்.
போலீஸாா் தரப்பில் கூறியதாவது: வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த பஞ்சு, அண்மையில் ஊருக்கு திரும்பி ஆட்டோ ஓட்டி வந்துள்ளாா். ஆனால், கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், பஞ்சு தனது மனைவி மீது சந்தேகம் காரணமாக, ராதாவை கொலை செய்திருப்பது தெரிவந்துள்ளது என்றனா்.